Thursday, December 5, 2013

படைப்பு

     - துவாரகை தலைவன்

முட்டையின் உள்ளே
மோதும் விரல்ககள்.
உதிர்க்க வேண்டியதைத் தள்ளி
மூடிய கண்கள் கண்ட - தன்
கனவு உருவத்தை
உள்ளிருந்து செதுக்கும்.
தன் விருப்பங்களின்
களிமண்ணைக் குழைத்து
அதில் தோய்ந்து
அதற்கும் தனக்கும்
வேறுபாடு மறந்த உயிரின்
கற்பனைக் கைகள்.
மண் கலவைக்குள்
மறைந்து கொள்ளும்
அந்தக் கைகளும்
இப்போது மண்.
சிறு களிமண் குவியலுக்குள்
புதைந்திருந்து சுழன்று
தன்னைப் படைத்துக் கொள்பவனுக்குப் பெயர்
மனிதன்.


நன்றி : கவ்யா தமிழ்    ஜூலை - செப்டம்பர்  2013


No comments:

Post a Comment