Sunday, April 26, 2015

குகை வாய் பயணம்

-      துவாரகை தலைவன்

ஐயப்பாட்டின்
அகன்ற குகை வாய்க்குள்
நுழையும் ரயில்
வெளி வந்த பின்னும்
விலகாத இருள்.
அச்சம் பரவி யிருக்
பயணம் தொடரும்.

ஆபத்தைத் தாண்டிக் குதிக்
இன்னும் தென்படவில்லை
சேர வேண்டிய
ரயில் நிலைய நடைமேடை .


உராய்ந்தபடி  நிற்கும் சக்கரங்கள்,
நெஞ்சை நிறுத்திக் குலுக்கிய
வதந்தி யொன்றை
மீண்டும் மீண்டும்
நினைவு படுத்தி
செவிப்பறையைக் கிழிப்பவை.

வண்டிக்குள் தாவுகின்ற
மோப்ப நாயோடு
நுழைந்து வெளியேறும்
குளிர்க் காற்று
சந்தேகத்தைத் துடைத்துச்
சென்று விடுமென்று
ஏக்கத்தில் விரியும் விழிகள்.

உள்ளங்களைச் சிதறி விழச் செய்யும்
வாசனையை நுகர
நாயின் மூக்கு நீளும்.
அது விடும் வெப்பக் காற்றை
விடாமல் பற்றிக் கொண்டு
பெருமூச்சுகள் தொடர்கின்றன.

மார்போடு அணைத்த
குழந்தையின் காதுகளில்
அதிரும் நெஞ்சத்தைக்
கடந்து செல்லும் நாய்
ரயில் பெட்டி நடை பாதையெங்கும்
பதிக்கும் கால் தடங்களில்
நம்பிக்கையின் முத்திரை.

வேகமாய் முன்னேறும்
நாயின் இரைப்பொலி
பதற்றத்தின் செவிகளை
கவ்விக் கொண்டு செல்லும்.

ஐயத்தின் தடித்த வாய் திறந்திருக்க
எச்சில் ஒழுகும் நாவின் ஊசலில்

ஒரு நூறு உயிர்கள்...


நன்றி : புதுப்புனல்  ஏப்ரல் 2015